சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் செயல்பட்டதாகக் கருதப்படும் வீரேந்தர் சிங் பசோயா என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE)Press Information Bureauமற்றும்Narcotics Control Bureau (NCB)அதிகாரிகளின் தீவிர கூட்டு நடவடிக்கையால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த முக்கியக் கைது நடவடிக்கை தொடர்பாகத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வரும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ (Zero Tolerance) கொள்கைக்குக் கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றி இதுவெனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் கடத்தல் காரர்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரச் சூழல் அமைப்பையே (Ecosystem) மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வேரறுத்து அழித்து வருகிறது என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
“கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை” (Top-to-Bottom and Bottom-to-Top) என்ற முறையில் அனைத்து கோணங்களிலும் தீவிரம் காட்டி வரும் நமது புலனாய்வு அமைப்புகள், குற்றவாளிகள் உலகின் எந்த மூளையில் போய் ஒளிந்து கொண்டாலும் இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்களின் நீண்ட கரங்களில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளன என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) சர்வதேசத் தொடர்புகள் மற்றும் இன்டர்போல் (Interpol) உதவி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, சர்வதேச அளவிலான போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் இந்தத் துரிதமான செயல்பாட்டைப் பாராட்டியுள்ள பாதுகாப்பு வட்டாரங்கள், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இது ஒரு மிகக் கடுமையான எச்சரிக்கையாக அமையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றன.