ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல்!: சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தில் திடீர் சிக்கல்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

இதன் நேரடி எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் வேகமாகக் உயரத் தொடங்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் சப்ளை சங்கிலியில் ஏற்படும் தாமதம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் வர்த்தகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

உலகின் மொத்தக் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் கணிசமான பங்கு இந்த வழியிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த நீரிணையில் ஏற்படும் எந்தவொரு சிறு தடங்கலும் சர்வதேச சந்தையில் உடனடியாகப் பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலை நீடித்தால், வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment