மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜய்க்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்குத் தீவிரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ விஜய் பேசிய உரையும், அதைத் தொடர்ந்து எழுந்த கடுமையான அரசியல் எதிர்ப்புகளும் பெரும் விவாதப் பொருளாக மாறின.
சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த காரசாரமான பேச்சுகளுக்குப் பிறகு, அவருக்கு அரசியல் ரீதியாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வந்தன. இந்நிலையில்தான், அவரது உயிருக்கு ஆபத்து மற்றும் பாதுகாப்பு அச்சறுத்தல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, காவல்துறை அதிகாரிகள் இந்த அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய்க்கு இன்று முதல் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதம் தாங்கிய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் ரீதியான காரசாரமான சூழல் நிலவி வரும் தருணத்தில், சட்டமன்ற உறுப்பினருக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கை தென் மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.