“தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் ஆளும் சக்தி கொண்டவர்!”: திருப்பூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து தள்ளிய அமைச்சர் செங்கோட்டையன்!

திருப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை மற்றும் தலைமையை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழக அரசியல் வரலாற்றில் தலைவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினார்.

தனது உரையின் போது, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களுக்குப் பிறகு தமிழகத்தைச் சீரோடும் சிறப்போடும் வழிநடத்தும் அசாத்திய திறன் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு மட்டுமே முழுமையாக உள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட செங்கோட்டையன், “அவர் தமிழகத்தை மட்டும் வழிநடத்துபவர் அல்ல; எதிர்காலத்தில் இந்திய திருநாட்டையே ஆளும் வல்லமையும் ஆளுமையும் கொண்டவர் முதலமைச்சர் விஜய்” எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழக வெற்றி கழக அரசு பதவியேற்ற இந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், விஜய்யின் தொலைநோக்கு பார்வை தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார்.

மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் விஜய்யின் தாக்கம் எதிரொலிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் செங்கோட்டையன் பேசிய இந்த உரை, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment